Our Feeds


Wednesday, December 4, 2024

Sri Lanka

2 வாரங்களுக்குள் அரிசி இறக்குமதி செய்யப்படா விட்டால் - என்ன நடக்கும்?



எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என  அதன் தலைவர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டார்.


“நாம் நீண்ட கால தீர்விற்கு செல்ல வேண்டும், இல்லை என்றால், மீண்டும் மீண்டும் இந்த நெருக்கடிக்கு செல்லலாம்.

சிறு போகத்தில் நெல் கொள்முதல் செய்ய, நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த நெருக்கடியை தீர்க்க முறையான திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

 மேலும், அரசாங்கம் குறுகிய கால தீர்வாக வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யாவிட்டால், இந்த நிலையில் சந்தையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படலாம்" என்றார்.


பீர் மற்றும் கால்நடை தீவன உற்பத்திக்கான அரிசியை வழங்கும் போது அதனை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.


இதனிடையே, வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக மீண்டும் பயிரிட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் விவசாய பணிப்பாளர் கே. பி. குணரத்ன தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »