Our Feeds


Thursday, December 5, 2024

Zameera

சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்


 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 
சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
 
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »