ஹொரணை - மத்துகம வீதியில் மதுராவல பிரதேசத்தில்
இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று புதன்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியின் வலது புறமாக திரும்பி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அங்குருவாதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.