Our Feeds


Monday, December 23, 2024

Zameera

பாடசாலை உபகரணங்களின் விலை உயர்வு

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்களின் விலை அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சில பாடசாலை உபகரணங்களின் விலை சுமார் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் நீக்கினால் இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என சுட்டிக்காட்டிய  இலங்கை ஆசிரியர் சங்கம், வரியை உடனடியாக நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »