தாஜுதீன் படுகொலை உட்பட சர்ச்சைக்குரிய படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவோம் என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய முஜிபூர் ரஹ்மான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம், தாஜுதீன் படுகொலை தொடர்பில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானின் உரையை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ,கடந்த காலங்களில் சர்சைக்குரியதாக பேசப்பட்ட தாஜூதின் படுகொலை, உட்பட ஏனைய படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.
தொழில்நுட்ப காரணிகளால் கடந்த காலங்களில் குறித்த தரவுகளை பெற்றுக்கொள்வதில் மாதம் ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்த தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆகவே முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்றார்.