Our Feeds


Tuesday, January 28, 2025

Sri Lanka

வெகுவிரைவில் மாற்றம் ஏற்படும் - முன்னாள் அமைச்சர் செஹான்!

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு அதிருப்தியடைந்துள்ள மக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாடுகிறார்கள். வெகுவிரைவில் மாற்றம் ஏற்படும் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (27)  நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை வீட்டெடுத்தோம் என்று பெருமிதம் கொள்ளும் தார்மீக உரிமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கிடையாது.

பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த திட்டங்களை தவிர்த்து புதிய திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதா என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »