Our Feeds


Sunday, February 23, 2025

Zameera

ஊடகவியலாளர் சமுதித்தவுக்கு பொலிஸ் பாதுகாப்பு


 இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர்  தெரிவித்துள்ளார்.

அவரின் உயிருக்கு அதிகரித்த அச்சுறுத்தல்கள் மற்றும் அவரது நான்கு நேர்காணல் செய்பவர்களின் மரணத்தைத் தொடர்ந்து, குறித்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் நான்கு பொலிஸ் அதிகாரிகள் தனக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சமுதித்த சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

சமுதித்த சமரவிக்ரமவினால் நேர்காணல் செய்யப்பட்ட நான்கு பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை அடுத்து சமுதித்த சமரவிக்ரம  தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பாராளுமன்றத்திலும் இந்த விடயத்தை எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நீதிபதிகள் மற்றும் குறிப்பாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் சமுதித சமரவிக்ரம போன்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »