Our Feeds


Friday, March 7, 2025

Zameera

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது


 மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


மேலும் அம்மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


முதல்கட்ட விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »