Our Feeds


Tuesday, March 4, 2025

Zameera

தேசபந்து தென்னகோன் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் சரணடைவார்

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை மறுநாள் (06) நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், நேற்று (03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மாலை வரை அப்படி எந்த சம்பவமும் பதிவாகவில்லை.

இருப்பினும், வெலிகம பொலிஸ் தலைமையகத்தில் நீதிமன்ற திகதி அடுத்த வியாழக்கிழமை என்பதால், அன்றைய தினம் அவர் ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »