Our Feeds


Sunday, March 9, 2025

Sri Lanka

தேசபந்து தென்னகோன் விரைவில் கைதாகுவார்!


முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கொழும்பு - புறக்கோட்டை பாஸ்டியன் வீதியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் கட்டப்பட்ட மிதக்கும் சந்தை வளாகத்தின் தற்போதைய நிலை குறித்த கண்காணிப்பு விஜயத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »