சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 448 கிலோகிராம் மஞ்சள், மண்டைதீவில் வைத்து யாழ். மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவர் தப்பியுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.