தாய்லாந்தில் பயிற்சி விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த ஆறுபேரும் அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெங்கொக்கிலிருந்து தென்மேற்கே 130 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கடலில் பராசூட் பயிற்சிக்காகச் சோதனை ஓட்டம் மேற்கொண்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.