கலாவாவியில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க மற்றும் நீர்ப்பாசனத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் புத்திக நவரத்ன ஆகியோர், இன்று அதிகாலை அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
கலாவாவியில் நீண்ட காலமாக இந்த நீர் கசிவு ஏற்பட்டு வருவதாகவும், இதனால் கலாவாவிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நீர் கசிவு ஏற்படும் பகுதியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான கலாவாவியில் சில நாட்களாக நீர் கசிவு ஏற்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பிரதேசவாசிகள் சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.