சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
சிங்கப்பூரில் பாராளுமன்ற தேர்தல் மே 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி 32 புதிய வேட்பாளர்களை களம் இறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் இங் இங் ஹென், தனது பதவியை இராஜிநாமா செய்ததுடன், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்தோடு மே 3ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.
இங் இங் ஹென் இதுபற்றி கூறுகையில்,
’ என்னைப் போன்ற மூத்த அரசியல்வாதிகளுக்கு, நாங்கள் புதியவர்களாக வந்தபோது நாங்கள் கண்ட உதாரணங்களைப் பின்பற்றுவதும் ஒரு நற்பண்பு என்று நான் நினைக்கிறேன். ஆளும் மக்கள் செயல் கட்சி எதிர்காலத்திற்காக தயாராவதால் நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்’ என்றார்.