Our Feeds


Friday, April 25, 2025

ShortNews

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு! - நாமல் அச்சம்.


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது என்ற  சந்தேகம் காணப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.


கொழும்பில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். பொதுமக்கள் அச்சமில்லாமல் இருக்கலாம் என்று அரசாங்கம் குறிப்பிகிறது. ஆனால் பகிரங்கமாக தற்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் மாத்திரம் 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடிதம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஏன் இலக்காகக் கொண்டு செயற்படுகிறது.


நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது. புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக தேடப்படும் பெண் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.


பாதாள குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்துகிறது. பாதாள குழுவினராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »