தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லாமையினாலேயே அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி உரிய தீர்மானத்தை எடுக்காவிடின் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு உள்ளாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பியவர்களைக் கொலை செய்தவர்கள் இன்று கிழக்கை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழர்களின் குரலை மௌனிக்கச் செய்ய முயற்சிப்பவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.