Our Feeds


Monday, April 21, 2025

Sri Lanka

மோடி வந்த போது “சாரா ஜெஸ்மினை” அழைத்து வரவில்லையா? என கேட்டிருக்கலாமே? அமைச்சர் நளிந்தவிடம் SJB, MP சுஜீவ சேனசிங்க கேள்வி.



ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரசின் பிரதம கொரோடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை விசாராணை செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.


கட்டுவாபிட்டிய குண்டுதாரியின் மனைவி சார ஜெஸ்மின் இந்தியாவிற்கு தப்பியோடியதாக பிரதம கொரோடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார்.


இந்த விடயத்தை நாம் கூறியிருந்தால் எம்மை சி.ஐ.டியில் வைத்து விசாரணை செய்திருப்பார்கள். மோடி வந்த போது சாராவை அழைத்து வரவில்லையா என நளிந்த ஜயதிஸ்ஸ கேட்கவில்லையே ஏன்? என பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »