Our Feeds


Friday, May 16, 2025

Zameera

நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 11 பஸ்கள் மீது திடீர் பரிசோதனை


 ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பஸ்களை

நேற்று (15) கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

 

இந்த நடவடிக்கையின் போது, பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட ஐந்து இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள், ஆறு தனியார் பஸ்கள் உட்பட 11 சாரதிகள் மீது ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சில பஸ் சாரதிகளுக்கு குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டன.

 

இந்த பஸ் பரிசோதனையின்போது, பயணிகளை விழிப்புணர்வு செய்யும் வகையில், பஸ் சாரதிகள் போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »