Our Feeds


Wednesday, May 28, 2025

SHAHNI RAMEES

“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம்!

 


குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச்

செல்ல முயன்றமை தொடர்பில் பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவர் உட்பட மூவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று புதன்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.


சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “ஹரக் கட்டா” பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »