பிரித்தானியாவுக்கு தொழில் மற்றும் கல்வி விசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதா பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இந்த விடயத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொழில் அல்லது கல்வி விசாவில் சட்டரீதியாக பிரித்தானியாவிற்குள் பிரவேசித்து, பின்னர் அரசியல் தஞ்சம் கோருகின்றனர்.
இதனால் பிரித்தானியாவின் வரி செலுத்துனர்களது நிதி வீணடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
அதற்கு அமையவே தொழில் மற்றும் கல்வி வீசாவுக்கு விண்ணப்பிப்போர் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.