Our Feeds


Sunday, May 4, 2025

ShortNews

இலங்கையில் அதிகரித்து வரும் ஆஸ்துமா நோய்!

 

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உலகளவில் ஒவ்வொரு 100,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

மே மாதம் 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா நோய் தினம் ஆகும். 

உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா அதிகரித்துள்ளது.   இன்ஹேலர் அடிப்படையிலான சிகிச்சையானது பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் ஆஸ்தமாவை திறம்பட  நிர்வகிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் ஆஸ்துமா பரவலாக இருந்தாலும், நாட்டில் பல தனிநபர்கள் கண்டறியப்படாமல் உள்ளனர் என சுவாச நோய் வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதடு எனக் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »