Our Feeds


Tuesday, June 24, 2025

Sri Lanka

200 உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தி வசம்!


பலாங்கொடை நகர சபை மற்றும் தனமல்வில பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றியது.

இன்று இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் தொடக்க அமர்வுகளின் போது நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது.

அதன்படி, இதுவரை மொத்தம் 200 உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது என்பதை மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.

அதேபோல, இலங்கை தமிழரசுக் கட்சி 17 உள்ளூராட்சி சபைகளையும், இலங்கை பொதுஜன பெரமுன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தலா 3 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.

மேலும், சுயேச்சைக் குழுக்கள் உட்பட பல கட்சிகள் 12 உள்ளூராட்சி அமைப்புகளில் அதிகாரத்தைப் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »