Our Feeds


Sunday, June 29, 2025

Sri Lanka

செர்பிய ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டம்!



செர்பியாவின் தலைநகரான பெல்கிரேடில் தற்போதைய அரசாங்க த்தை எதிர்த்து பாரிய அளவிலான  போராட்டங்கள் நடந்து வருகின்றன. செர்பிய  ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின் 12 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, மாணவர்கள் தலைமையிலான இந்த போராட்டம் சமீபத்திய செர்பிய வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகும், இதில் சுமார் 140,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இப் போராட்டக்காரர்கள் தேர்தல்களை நடத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் , நாட்டைக் கைப்பற்றும் நோக்கில் ஒரு வெளிநாட்டு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி வுசிக் குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »