Our Feeds


Tuesday, June 17, 2025

Sri Lanka

சீதாவக்கை பிரதேச சபையில் சர்ச்சை - காலவரையின்றி ஒத்திவைப்பு!


சீதாவக்கை பிரதேச சபைக்கான புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் இன்று (17) உள்ளூராட்சி சபை ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தர தலைமையில் தொடங்கியது.

தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு ​​ஒரு தரப்பினர் திறந்த வாக்கெடுப்பை முன்மொழிந்தமை, மறு தரப்பினர் இரகசிய வாக்கெடுப்பை முன்மொழிந்தமையினால் தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் இரகசிய வாக்கெடுப்பாக நடத்தப்படும் என்று ஆணையர் கூறியுள்ளார்.

அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24 உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியதால் கோரம் இல்லாததால் கூட்டத்தை 30 நிமிடங்கள் ஒத்திவைக்க ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இருப்பினும், பின்னர் எழுந்த சூழ்நிலையின் அடிப்படையில், சீதாவக்கை பிரதேச சபையை காலவரையின்றி ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »