Our Feeds


Sunday, June 22, 2025

SHAHNI RAMEES

அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை!



போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.


இந்த தாக்குதல் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட செய்தியில், ஈரான் மீது நடந்த தாக்குதல் வெற்றியடைந்து உள்ளது. உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை என தெரிவித்து உள்ளார்.


இந்நிலையில், ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது. அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம் என ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி எச்சரிக்கை விட்டுள்ளார்.


இதுபற்றி ஈரான் தலைவர் காமேனியின் பிரதிநிதி கூறும்போது, தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம் என டிரம்பும் எச்சரித்து உள்ளார்.


ஈரானிய ஆதரவு பெற்ற போராளி அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள தூதரகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »