சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும் விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்குமாறு கோரியும் நேற்று (09) போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் பொசன் பௌர்ணமி தினமான இன்று (10) திஸ்ஸ விகாரைக்கு பல சிங்கள மக்கள் அழைத்து வரப்படவுள்ளதால் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தரைப் பிரயோக இயந்திரமும் கொண்டு வரப்பட்டுள்ளது.