ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்துவதற்கான மசோதாவை அந்நாட்டு பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளதாக ஈரானின் நூர்நியூஸ் தளம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் வெளிப்படையான ஒப்புதலுடன் மட்டுமே IAEA ஆய்வாளர்கள் ஈரானுக்குள் நுழைய முடியும், அதுவும் அந்த நிறுவனம் நாட்டின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.