Our Feeds


Saturday, July 12, 2025

SHAHNI RAMEES

260 உயிர்களை பலியெடுத்த - அகமதாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் வெளியானது!


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் தேதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், விமானப் பணியாளர்கள் உள்பட 241 பேர் பலியாகினர். மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரிக் கட்டிடம் மற்றும் குடிருப்புப் பகுதிகளில் இருந்த 19 பேர் பலியாகினர். (மொத்தமாக 260 உயிர்கள்)


இதுதொடர்பான அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-


விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின்களில் எரிபொருள் விநியோகம் தடைபட்டது. இதனால் என்ஜின்களின் சக்தி குறைந்தது. விமானி ஒருவர் மற்ற விமானியிடம், "ஏன் எரிபொருளை நிறுத்தினீர்கள்?" என்று கேட்டதாகப் பதிவாகி உள்ளது. அதற்கு மற்ற விமானி, "நான் அப்படி எதுவும் செய்யவில்லை" என்று பதில் அளித்துள்ளார்.


இந்த கட்டளையற்ற நிறுத்தம் ராம் ஏர் டர்பைனின் (RAT) நிலைநிறுத்தத்தைத் தூண்டியது, மேலும் விமானம் உடனடியாக உயரத்தை இழக்கத் தொடங்கியது, இயங்கும் பறக்கும் கட்டுப்பாட்டை தக்கவைக்க முடியவில்லை

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »