Our Feeds


Sunday, July 6, 2025

Admin

நுரைச்சோலை முதல் மின் உற்பத்தி நிலைய பராமரிப்பு பணி நிறைவு!


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதல் மின் உற்பத்தி நிலையம் நாளை மறுநாள் (8) மீண்டும் தேசிய மின் உற்பத்தி நிலையத்துடன் இணைக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது.

ஜூன்13 ஆம் திகதி தொடங்கிய திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள்  காரணமாக இந்த மின் உற்பத்தி நிலையம் 25 நாட்களுக்கு செயலிழந்திருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள்  நிறைவடைந்துள்ளதாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய ஊடகப் பேச்சாளர் தம்மிகே விமலரத்ன தெரிவித்துள்ளார்.

முதல் மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இணைக்கப்பட்டவுடன், மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் உற்பத்தி நிலையத்திற்கு 300 மெஹாவோட் மின்சாரத்தை வழங்கும்.

இதற்கிடையில், நேற்று (5)  மின்சார உற்பத்தியில் நீர் மின்சாரம் அதிக பங்கைக் கொண்டிருந்தது, மொத்த உற்பத்தியில் 39.8% உற்பத்தி செய்தது. அன்றைய மொத்த மின்சார உற்பத்தியில் அனல் மின்சாரம் 24.9% பங்களித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »