ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண
கொடுப்பனவு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 181 வாக்குகள் பதிவான அதேநேரம் எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இதனடிப்படையில், ஊழியர்களுக்கான வரவு - செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் திருத்தங்களுன் 181 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்கு சற்றுமுன் அறிவித்தார்.
