Our Feeds


Monday, July 21, 2025

SHAHNI RAMEES

ஓய்வூதியத்தைப் பெற ஜெனீவா செல்ல திட்டமிடும் முன்னாள் எம்.பி.க்கள்

 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம்

இரத்து செய்யப்பட்டால், ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஏற்கனவே முடிவு எடுத்துள்ளதாகக் கூறினார்.


இது மிகவும் நியாயமற்ற முடிவு என்று கூறிய மானகே, தங்கள் மருந்துகளைப் பெற ஓய்வூதியம் வரும் வரை காத்திருக்கும் பல வயதான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவால் பெரும் சிக்கலில் சிக்குவார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.




ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட ஓய்வூதியத்தால் பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் ஓய்வூதியத்தை இரத்து செய்வதால் ஏற்படும் சூழ்நிலையை பரிசீலிக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »