மத்திய கலாசார நிதியத்தால் (CCF) நிர்வகிக்கப்படும் சிகிரியா, யாபஹுவா மற்றும் தம்புள்ளை போன்ற கலாசார பாரம்பரிய இடங்களை நுழைவு கட்டணம் செலுத்தாமல் 18 வயதுக்குட்பட்டவர்கள் இலவச அனுமதி வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
உள்ளூர் இளைஞர்களிடையே தேசிய பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வையும் பாராட்டையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார துணை அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு குழந்தைகளுக்கும் நுழைவு அனுமதி வழங்கப்படும் என்று துணை அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
