Our Feeds


Wednesday, August 6, 2025

Sri Lanka

இந்தியா மீது மேலும் 25 சதவீதம் வரி விதிப்பு - ட்ரம்ப் அறிவிப்பு!


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, ஜூலை இறுதி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார். 

இந்தக் காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்தந்த நாட்டில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என வலியுறுத்திருந்தார். 

அமெரிக்கா- இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார். அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தார். ஆனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. 

இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றையும் வௌியிட்டார். 

அதற்கமைய, தற்போது இந்தியா மீது மேலும் 25 சதவீதம் மேலதிக வரி விதிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். 

இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »