Our Feeds


Wednesday, August 27, 2025

Zameera

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்​தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி  நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (27) அன்று  உத்தரவிட்டுள்ளது.

பொதுஹெரவை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன்  ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், நிஷாந்த உலுகேதென்ன கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »