Our Feeds


Tuesday, August 12, 2025

Zameera

மன்னார் காற்றாலை குறித்து ஜனாதிபதியுடன் சந்திப்பு நாளை – எம்.ஜெகதீஸ்வரன்

மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு நாளை (13) இடம்பெற உள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பான மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.


இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பாலும் விடுக்கப்பட்டிருந்தது.


இதன் பிரகாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளுடன் ஜனாதிபதி சந்திப்பொன்றை ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்துள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »