Our Feeds


Friday, August 15, 2025

Zameera

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு


 மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி நேற்று (14) இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார்.


களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - பெலியத்த ரயில் மார்க்கத்திலேயே இச் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


விபத்தில் உயிரிழந்தவர் யார் என்று இதுவரை வெளியிடப்படாத நிலையில், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »