Our Feeds


Sunday, September 28, 2025

Zameera

12 இந்திய மீனவர்கள் கைது


 இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கைதானவர்கள் தமிழகத்தின் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நெடுந்தீவு அருகே உள்ள கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இலங்கை கடற்படையினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கைதானவர்கள் விசாரணைகளுக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், விசாரணையின் பின்னர் அவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »