ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருட காலத்திற்க்குள் அவர் நியமித்த நிறுவன தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் 23 பேர் ராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மற்றும் இந்த அரசின் செயற்பாட்டின் அதிருப்தியை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி கொண்டே அவர்களை ஆதரித்தவர்கள் பிரிந்து செல்வதாக அவர் கூறினார்.
