Our Feeds


Thursday, September 25, 2025

Zameera

பெக்கோ சமனின் மனைவி தொடர்ந்து விளக்கமறியலில்


 பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

 

மித்தேனியவைச் சுற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் சந்தேக நபர் எவ்வாறு ஈடுபட்டார் என்பதைக் குறிக்கும் சாட்சியச் சுருக்கத்தை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »