Our Feeds


Thursday, September 4, 2025

Zameera

பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு


 யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் எனும் 7 வயது சிறுவன் பட்டம் விட்டு விளையடிக்கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 


கடந்த 31 ஆம் திகதி குறித்த சிறுவன் பட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 


அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கு சிறுவன் மயக்கமடைந்துள்ளார். 


ஆனால், சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று (03) மாலை அவர் உயிரிழந்துள்ளார். 


பிரேத பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவே உயிரிழப்புக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »