பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கிறது லக்சம்பர்க்
இம்மாதம் 22ம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க தங்கள் நாடு திட்டமிட்டுள்ளதாக லக்சம்பர்க்கின் பிரதமர் லூக் ஃப்ரீடனும் வெளியுறவு அமைச்சர் சேவியர் பெட்டலும் நாடாளுமன்ற ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர்.
லக்சம்பர்க் இஸ்ரேல் மீது மேலதிக தடைகள் போன்ற கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை முன்மொழிவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
