Our Feeds


Friday, October 17, 2025

Zameera

தெற்கு கடலில் பிடிபட்ட படகில் ஹெரோயின் போதைப்பொருள்


 இலங்கை கடற்படையால் தெற்கு கடற்பரப்பில் வைத்து சுற்றிவளைக்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 53 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 


போதைப்பொருள் தொகையை கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் குறித்த மீன்பிடி படகு இன்று (17) காலை சுற்றிவளைக்கப்பட்டு காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் விளைவாக போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்படுள்ளது. 

அந்த மீன்பிடி படகில் இருந்த ஐந்து பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »