Our Feeds


Friday, October 3, 2025

SHAHNI RAMEES

ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு பயணம்!

 
'

ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
அக்டோபர் 9 முதல் 16 வரை புது டெல்லிக்கு பயணம் செய்ய ஐ.நா. பாதுகாப்பு சபை அவருக்கு அனுமதி அளித்துள்ளது. 

 
தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் முத்தாகி இருப்பதால், ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் 1988 (2011) இன் கீழ் தலிபான் தலைவர்களுக்குப் பொருந்தும். 
 
இதனால் இந்தியாவுக்குச் செல்வதற்கு அவருக்கான அனுமதி அவசியமாகவிருந்தது. 
 
இதனடிப்படையில் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அல்லாத பாகிஸ்தான் தலைமையில் கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது. 
 
தலிபான் வெளியுறவு அமைச்சர் ஒருவர் புது டெல்லிக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறை. அவரது வருகை குறித்து வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. 

 
இந்தப் பயணம் செப்டம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபை அவருக்கு முன்னதாக அனுமதி அளிக்கவில்லை. 
 
தலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்காத நிலையில், மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கான உதவிகளை வழங்கி வருகிறது. 
 
இந்த ஆண்டு மே மாதம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான உரையாடலையும், ஜனவரி மாதம் துபாயில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலிபான் அமைச்சருடனான சந்திப்பையும் தொடர்ந்து முத்தாகியின் வருகை அமைந்துள்ளது. 

 
2021 ஒகஸ்ட் மாதத்தில் காபூலில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் நடந்த முதல் அரசியல் மட்ட தொடர்பு மற்றும் உரையாடல் இதுவாகும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »