Our Feeds


Friday, October 31, 2025

Admin

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மு.கா. இன் குச்சவெளி பிரதேச சபை தலைவர் கைது!




குச்சவெளி பிரதேச சபையின் தலைவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 



முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், ரூபாய் 5 இலட்சம் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


அவருடன் சேர்த்து, பிரதேச சபை தலைவரின் தனிப்பட்ட சாரதியும் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »