Our Feeds


Friday, October 10, 2025

Sri Lanka

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை நீக்கப்பட்டதை வரவேற்கிறார் சானக்கியன்!


துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து நீக்குவதற்கான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முடிவை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் வரவேற்றுள்ளார்.

கொள்கலன் மோசடி தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகள் அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள நிலையில், இது அவசியமான நடவடிக்கை என்று ராசமாணிக்கம் கூறினார்.

இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் நீண்டகாலமாக தாமதமாகி வரும் மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துக்குப் பொறுப்பான புதிய அமைச்சருடன் ஆக்கப்பூர்வமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இன்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »