சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு நம் நாடு அடிமையாக மாறக்கூடாது என்றும், அவற்றை அடிமைகளாகப் பின்பற்றுவது நமது சுயமரியாதைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தெரண ஊடக வலையமைப்பின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (09) கொழும்பில் உள்ள பேராயர் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ ஆராதனையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற இந்த ஆராதனையில் தெரண ஊடக வலையமைப்பின் நிறுவனர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, உபத் தலைவர் லக்சிறி விக்ரமகே, நிறைவேற்று பணிப்பாளர் மாதவ மடவல, பணிப்பாளர் குழு, உயர் முகாமைத்துவம் மற்றும் தெரண பணிக்குழாமும் கலந்து கொண்டனர்.
