Our Feeds


Friday, October 10, 2025

Sri Lanka

மகிந்த ஒரு மாவீரர் - மஹிந்தவை சந்தித்த ஞானசார தேரர் புகழாரம்!



பொதுபல சேனா (பிபிஎஸ்) பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட ஒரு பிக்குகள் குழு, தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளது.

இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதியின் தங்காலையில் உள்ள தனிப்பட்ட இல்லத்தில் நடைபெற்றது.

“மகிந்த ராஜபக்ஷ நாட்டின் மறக்க முடியாத ஜனாதிபதி. அவர் நம் வாழ்நாளில் நாம் கண்ட ஒரு மாவீரர். இந்த கொரில்லா போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று பலர் கூறிய போதிலும், மஹிந்த ராஜபக்ஷ 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்,” என்று கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »