Our Feeds


Tuesday, October 14, 2025

SHAHNI RAMEES

மூன்று MRI ஸ்கேனர்கள் செயலிழப்பு!

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

தேசிய வைத்தியசாலையில் ஒரே ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

 

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சானக தர்மவிக்ரம, இந்த சூழ்நிலையால் நோயாளி பராமரிப்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 

இதேவேளை, கண்டி வைத்தியசாலையில் சிறுநீரக கற்களை உடைக்கும் இயந்திரம் ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கப்பட்டு இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று சானக தர்மவிக்ரம மேலும் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »