Our Feeds


Friday, November 14, 2025

Zameera

அவசர நோயாளர் காவு வண்டி படையணி - 500 ஆக உயர்த்த திட்டம்


 சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரமற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


விசேட பயிற்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதற்குத் தேவையான திட்டங்கள், நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொழில்நுட்பத்தை இணைத்து இந்த நோயாளர் காவு வண்டி சேவையை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.


அதுமட்டுமின்றி மேலும் 100 நோயாளர் காவு வண்டிகளை வாங்குவதற்கு இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அதனை தவிர ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் உதவியின் கீழ் 20 நோயாளர் காவு வண்டிகளும் அன்பளிப்பாக மேலும் 25 நோயாளர் காவு வண்டிகளையும் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »