Our Feeds


Sunday, November 30, 2025

Zameera

பலாலி பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்த வெள்ள நீர்!


 நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பாதுகாப்பு படைகளின் முகாம்கள் மற்றும் அலுவலகங்களும் பாதிப்படைந்துள்ளன.


அந்தவகையில் யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொலிஸார் பல்வேறு சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.


வெள்ள நீரை அகற்ற முடியாத நிலை காணப்படுவதுடன் தொடர்ச்சியாக மழையும் பெய்துவருவதால் பொலிஸாரின் சேவைகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது 


யாழ். பலாலி பகுதியில் அதிகளவான இடத்தில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.


பு.கஜிந்தன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »